கற்பழிப்பு ~ ஒரு பெண்ணாக யாரும் சந்திக்க
கூடாத ஒரு வக்கிரம்.
ஒரு பெண்ணிற்கு ஒரு ஆண் செய்யும் அநியாயங்களின் உச்சம்.இப்படிப்பட்ட ஆண்கள் இரண்டு கால் மிருகங்களாய் வாழும் மனித இனத்தின் எச்சம் .
ஒரு ஆணாய்,அண்ணனாய்,தந்தையாய்,மனிதனாய்,இதை எப்படி ஏற்றுக்கொள்கிறோம்???
அவளுக்கு 3 வயதோ?? 30 வயதோ?? - கவலை இல்லை.
அவள் வயதுக்கு வந்தாளா?? இல்லையா?? - தேவை இல்லை.
அவள் பால் குடிக்கும் மழலையா?? பால் கொடுக்கும் தாயா?? - இரக்கம் இல்லை
தான் செய்வது தவறுதானா?? - உணரவில்லை
தண்டனைக்கு பயமில்லை , இறக்க உணர்வு சிறிதும் இல்லை ,மனதில் ஈரம் கொஞ்சமும் இல்லை.இறைவன் மீதும் பயமில்லை.
இதை தட்டி கேட்க , தடுத்து நிறுத்த சட்டம் இல்லை.
மொத்தத்தில் மனிதனாய் இங்கு யாரும் இல்லை.
கண்ணு கலங்குது,நெஞ்சு வெடிக்குது,என்ன பன்ன போறன் நான்- என் சகோதரிகளை பாதுகாக்க.
யாரை கூட்டு சேப்பன் நான் குற்றவாளிகளை கொன்னு புதைக்க.
ஆட்சி இல்ல - அன்பு உண்டு.
காசு இல்ல - கருணை உண்டு.
எங்க போய் சொல்லுவன் எனக்கும் ஒரு பொம்பள புள்ள உண்டு .
