Tuesday, July 17, 2018

கற்பழிப்பு~வலியின் உச்சம்.


கற்பழிப்பு ~ ஒரு பெண்ணாக யாரும் சந்திக்க

கூடாத ஒரு வக்கிரம்.


ஒரு பெண்ணிற்கு ஒரு ஆண் செய்யும் அநியாயங்களின் உச்சம்.இப்படிப்பட்ட ஆண்கள் இரண்டு கால் மிருகங்களாய் வாழும் மனித இனத்தின் எச்சம் .

ஒரு ஆணாய்,அண்ணனாய்,தந்தையாய்,மனிதனாய்,இதை எப்படி ஏற்றுக்கொள்கிறோம்???

அவளுக்கு 3 வயதோ?? 30 வயதோ?? - கவலை இல்லை.

அவள் வயதுக்கு வந்தாளா?? இல்லையா?? - தேவை இல்லை.

அவள் பால் குடிக்கும் மழலையா?? பால் கொடுக்கும் தாயா?? - இரக்கம் இல்லை

தான் செய்வது தவறுதானா?? - உணரவில்லை 


தண்டனைக்கு பயமில்லை , இறக்க உணர்வு சிறிதும் இல்லை ,மனதில் ஈரம் கொஞ்சமும் இல்லை.இறைவன் மீதும் பயமில்லை.

இதை தட்டி கேட்க , தடுத்து நிறுத்த சட்டம் இல்லை.

மொத்தத்தில் மனிதனாய் இங்கு யாரும் இல்லை.

கண்ணு கலங்குது,நெஞ்சு வெடிக்குது,என்ன பன்ன போறன் நான்- என் சகோதரிகளை பாதுகாக்க.

யாரை கூட்டு சேப்பன் நான் குற்றவாளிகளை கொன்னு புதைக்க.

ஆட்சி இல்ல - அன்பு உண்டு.

காசு இல்ல  - கருணை உண்டு.

எங்க போய் சொல்லுவன்  எனக்கும் ஒரு பொம்பள புள்ள உண்டு .




  

No comments:

Post a Comment

கற்பழிப்பு~வலியின் உச்சம்.

கற்பழிப்பு ~ ஒரு பெண்ணாக யாரும் சந்திக்க கூடாத ஒரு வக்கிரம். ஒரு பெண்ணிற்கு ஒரு ஆண் செய்யும் அநியாயங்களின் உச்சம்.இப்படிப்பட்ட ஆண்க...