இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்
அன்பான என் சமுதாயமே!!!
நீ எங்கே செல்கிறாய்???.எதை தேடுகிறாய்???.
நான் பிறக்கும் போது நீ ஒரு தோற்றம் கொண்டிருந்தாய்.
நான் வளரும் போது நீ வேறு பரிமாணத்திற்கு தயாராகி கொண்டிருந்தாய்,
இதை அறியாமல் நானும் வளர்ந்து விட்டேன் ஒரு இளைஞனாக.
இளைஞன் என்ற ஒற்றை வார்த்தைக்குள் எவ்வளவு பொறுப்புகள்,எதிர்பார்ப்புகள்,
அவமானங்கள்.இவை அனைத்தையும் பொறுத்துக்கொண்டு தன்னையும்
தான் சார்ந்த சமுதாயத்தையும் முன்னேற்ற வேண்டும் என்ற ஒற்றை எண்ணமே
இங்கு பலகோடி இளைஞர்களின் குறிக்கோள்.
ஆனால் என் சமுதாயமே நான் கற்றுக்கொண்ட எதுவும் என்னையும் உன்னையும்
முன்னேற்ற எனக்கு பயன்படவில்லை.
விடை புரியாமல் தவித்தேன்.எனக்கு அழகான ஒரு சமுதாயம் இந்த உலகில்
வாழ்ந்து கொண்டிருப்பதாக சொல்லி சொல்லி வளர்த்தவர்களிடம் அது எங்கே
என கேட்டேன் ???.அவர்களிடம் பதில் இல்லை.
அவர்கள் சொன்னது போல் இந்த சமுதாயம் இல்லை.அவர்கள் சொல்லி வளர்த்த
அத்தனை சொற்களும் உயிரற்ற சொற்களாய் என் முன்னே நின்றது.
No comments:
Post a Comment